புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இவர்களிடந்தான் சரித்திரத்தைப் படைக்கும் சக்தியும் இருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது; உயிரையும் மதியாத உளவுரம் இருக்கிறது; அடக்குமுறையை உடைத்தெறியும் ஆற்றல் இருக்கிறது. இவர்கள் புரட்சிவாதிகள்; புரட்சிப் பாதையை விரும்புபவர்கள். தமிழீழத்தைப் பிறப்பிக்கும் தணியாத இலட்சியமும் இவர்களிடந்தான் உண்டு. தமிழீழத்தின் எதிர்காலக் காவலர்களும் இவர்கள்தான். இந்தப் புரட்சிவாத இளைஞர்களின் விடுதலையெழுச்சிக்கு விருந்தாக இந்தச் சிறிய நூலை அர்ப்பணிக்கிறோம்.